புன்னகை இளவரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகா, திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி விளம்பரப் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் சினேகா, குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் உடை அதிகரித்தாலும், பல்வேறு உடற்பயிற்சிகள் மூலம் ரொம்ப கஷ்ட்டப்பட்டு தனது உடல் எடையை குறைத்தவர், பழைய புன்னகை இளவரசி போல பளபளப்பாகவும் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துக்கொண்ட சினேகா அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார்.
அதேபோல், சிவகார்த்திகேயன் படத்திற்காக கஷ்ட்டப்பட்டு உடல் எடையை குறைத்தவர், அந்த படத்தில் தனது காட்சிகளை கட் செய்துவிட்டார்கள், என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில், உடல் எடையை கஷ்ட்டப்பட்டு குறைத்த சினேகாவுக்கு பட வாய்ப்புகளும் அதிகம் வந்தது. ஆனால் திடீரென்று அவரது உடல் எடை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்த அவர் என்ன என்னவோ செய்தாலும், எதுவும் சரியான பலன் அளிக்கவில்லையாம்.
இன்று சென்னையில் நடைபெற்ற கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட சினேகாவின் உடல் பறுமனை பார்த்து அனைவரும் அவரிடம், என்ன இது இப்படி குண்டாயிட்டீங்களே, என்று விசாரித்தார்களாம். இதனால் சினேகா சற்று வருத்தமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...