Latest News :

விஜயகாந்தை பார்த்து பயந்த ரஜினிகாந்த்!
Monday January-22 2018

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமசனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இதேபோல், விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போதும், இப்படி ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி சங்கத்தின் கடனை அடைத்தார்.

 

விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது, அவரை பார்த்து ரஜினிகாந்த் பயந்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

கலை நிகழ்ச்சிக்காக முன்னணி நடிகர் நடிகைகளை நேரில் சந்தித்து அழைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விஜயகாந்த், ரஜினியையும் சந்திக்க சென்றாராம். அப்போது, ரஜினிகாந்த் பாபா படப்பிடிப்பில் இருந்த போது, அங்கே சென்ற விஜயகாந்த், காரில் இருந்து இறங்கியதும் ரஜினியை நோக்கி வேகமாக நடந்தாராம். இவரை தூரத்திலிருந்து பார்த்த ரஜினிகாந்த் பயந்தே விட்டாராம். பிறகு தான் விஜயகாந்த் என்று தெரிந்ததாம்.

 

விஜயகாந்த், ரஜினியிடம் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வேண்டும், என்று சொன்னதும் உடனே சரி என்று சொன்னவர், கண்டிப்பாக வருகிறேன், என்பதையே பல முறை சொன்னாராம்.

 

இந்த தகவலை நடிகர் டெல்லி கணேஷ், சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

Related News

1828

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ’ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
Wednesday April-24 2024

கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...