தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’. இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மு.களஞ்சியம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.பிரியன் இசையமைக்கிறார். 17 வயது இளைஞரான இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவிபாஸ்கர் பாடல்கள் எழுத, எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்கிறார். மயில் கிருஷ்ணன் கலைத் துறையை கவனிக்க, லீ முருகன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை டி.ஜி.ராமகிருஷ்ணன் கவனிக்கிறார்.
முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இப்படத்தில், விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையில் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதையும் படத்தில் பதிவு செய்துள்ளார்களாம்.
இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டுள்ளார். இதில் இயக்குநர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன், ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...