ரஜினி, கமல் மற்றும் விஷால் பல நடிகர்கள் ஒரே சமயத்தில் அரசியலுக்கு நுழைகிறார்கள். இதில் கமல்ஹாசன் ஏற்கனவே தனது அரசியல் வேலையை தொடங்கிவிட்ட நிலையில், ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்திருப்பதோடு, கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியையும் தொடங்கிவிட்டார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினமே தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை நேற்று தனது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...