‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ராம்கி, சில காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், கார்த்தியின் ‘பிரியாணி’ படம் மூலம் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுத்தார். பிறகு ’மாசாணி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர், தற்போது தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ராம்கியின் நடிப்பில் வெளியான ‘இங்கிலீஷ் படம்’ என்ற படம் சுமாராக ஓடியது. இந்த நிலையில், நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக சொத்து வரியை ராம்கி கட்டவில்லையாம். அதன் நிலுவைத் தொகையான ரூ.1.17 லட்சம் சொத்து வரி செலுத்தாத காரணத்தால் ராம்கி வீட்டிற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...