சினிமாவில் நடிகைகளுக்கு எப்படி பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறதோ அதுபோல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் மற்றும் தொகுப்பாளினிகளுக்கும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, சிலர் தாங்கள் பணிபுரியும் தொலைக் காட்சிகளில் இருந்து வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சினிமாவில் காமெடி வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் தேவதர்ஷினி, பிரபல சேனல் ஒன்றில் காமெடி நிகழ்ச்சில் ஒன்றில் நடித்து வந்தார். சுமார் 300 எபிசோட்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து தேவதர்ஷினி, திடீரென்று விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவதர்ஷினியின் இந்த முடிவுக்கு பின்னால் எத்தகைய பிரச்சினை இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவரே தான் சேனலில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய தேவதர்ஷினி, “ஒரு மாற்றத்திற்காக தான், சின்ன பிரேக் தேவைப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அது என் குடும்ப சேனல் தான், எப்போது வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்.” என்று கூறியுள்ளார்.
தேவதர்ஷினி, தற்போது தமிழ் சினிமாவைப் போல, தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட வாய்ப்புகளை பெற்று வருகிறாராம். அங்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதால் அவர் டிவியில் பணியாற்றுவதில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...