நட்சத்திரங்களைப் போல ரசிகர்களிடம் பிரபலமாக உள்ள தயாரிப்பாளர்களில் ஜே.சதீஷ்குமாரும் ஒருவர். தனது ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களை தயாரித்ததோடு, பல விருது படங்களையும் தயாரித்து வருகிறது. தேசிய விருது என்றாலே ஜே.எஸ்.கே நிறுவனத்தின் படம் தான் என்று சொல்லும் அளவுக்கு இவர் தயாரிப்பில் வெளியான பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
இதற்கிடையே, இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘தரமணி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, ஊடகங்களின் பாராட்டு மழையிலும் நனைந்து வர, இப்படத்தை தயாரித்த ஜே.சதீஷ்குமார், தயாரிப்பாளராக பாராட்டு பெற்றுவருவதைக் காட்டிலும் நடிகராக பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
ஆம், ‘தரமணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள ஜே.சதீஷ்குமார், பல படங்களில் நடித்த அனுபவமுள்ள நடிகரைப் போல அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, தனது நடிப்பால் அனைவரையும் மிரட்டியுள்ளார். மனைவியை சந்தேகப்படும் போலீஸ் அதிகாரி வேடம் தான் சதீஷ்குமாருக்கு. தனது வேடத்தை மிக சிறப்பாக செய்துள்ள அவருக்கு, வில்லன், குணச்சித்திர வேடம் எது கொடுத்தாலும் பொருத்தமாக இருக்கும், அந்த அளவுக்கு அவரது நடிப்பு கச்சிதமாக இருக்கிறது.
மொத்தத்தில், கோடம்பாக்கத்திற்கு புதிய வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் கிடைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...