Latest News :

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை - இலங்கை பெண் சுசானா வெளியிட்ட தகவல்!
Saturday April-21 2018

நடிகர் ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், அமோக வரவேற்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 16 பெண்கள் கலந்துக்கொள்ள இறுதியில் 3 பேர் தேர்வானார்கள். இவர்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வார் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்தாலும், அனைவரும் யூகித்தது போல, ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

 

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து முதன் முறையாக பேசியுள்ளார் இலங்கை பெண் சுசானா. 

 

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலில் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்தேன் இப்போது உங்களுடைய அன்பை பெற்றிருக்கிறேன். 3 மாதம் நான் கொடுத்த உழைப்பு, நேரம் எல்லாம் வீண். ஆனால் இதிலிருந்து வெளிவந்த அடுத்த வேலையை பார்ப்பது நல்லது, உங்களுடைய அன்புக்கு நன்றி, என்று தெரிவித்துள்ளார்.

Related News

2452

சண்டைப் பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்! - அனல் அரசு பணியாற்றிய ‘ஜவான்’ தேர்வு!
Friday April-19 2024

இந்திய திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநராக வலம் வரும் அனல் அரசு, பல மொழித்திரைபப்டங்களில், சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருவதோடு, பல முன்னணி ஹீரோக்களின் பேவரைட் சண்டைப்பயிற்சி இயக்குநராகவும் திகழ்கிறார்...

’மிராய்’ மூலம் மீண்டும் மிரட்ட வரும் தேஜா சஜ்ஜா!
Friday April-19 2024

‘ஹனுமன்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இளம் நடிகர் தேஜா சஜ்ஜா...

‘உப்பு புளி காரம்’ இணையத்தொடரின் முதல் பார்வை வெளியீடு
Friday April-19 2024

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தனது புதிய இணையத் தொடருக்கு ‘உப்பு புளி காரம்’ என்று தலைப்பு வைத்துள்ளது...