சென்னை,மார்ச் 29 : ஏழை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் விஷால், நலிவடைந்த துயரத்தில் உள்ள சில திரையுலக கலைஞர்களுக்கும் தனது அறக்கட்டளை மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், ‘ரத்தகண்ணீர்’, ‘தூக்குமேடை’, ‘பேசும் தெய்வம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியவரும், “நூறாண்டு காலம் வாழ்க...நோய் நொடி இல்லாமல் வளர்க...” என்ற மெகாஹிட் பாடலை பாடியவருமான பாடகி சரளா அம்மா, மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே திண்டாடி வருவதாக, பத்திரிகை செய்தி மூலம் அறிந்த விஷால், அவர்களை தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலமாக மாதம் ரூ.5 ஆயிரம் தருவதாக தெரிவித்ததோடு, அவர்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநராக வலம் வரும் அனல் அரசு, பல மொழித்திரைபப்டங்களில், சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருவதோடு, பல முன்னணி ஹீரோக்களின் பேவரைட் சண்டைப்பயிற்சி இயக்குநராகவும் திகழ்கிறார்...
‘ஹனுமன்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இளம் நடிகர் தேஜா சஜ்ஜா...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தனது புதிய இணையத் தொடருக்கு ‘உப்பு புளி காரம்’ என்று தலைப்பு வைத்துள்ளது...