ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, “எங்கம்மா....நீ...எங்கம்மா..” என்று கேட்கும் வகையில் கவிதை ஒன்று எழுதிய பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன், தற்போது கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கான பாடல்களை எழுதியுள்ளார்.
கமல்ஹாசன் தொடங்கியுள்ள ‘மக்கள் நீதி மய்யம்’ அரசியல் கட்சியில் நடிகர் நடிகைகள் பலர் இணைந்து வருகிறார்கள். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாடலாசிரியர் சினேகனும் கமல் கட்சியில் இணைந்துவிட்டார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக ‘இது நம்மவர் படை’ என்ற தலைப்பில் சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். இதற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார்.
இந்த பாடல்களின் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொடண்டகள் கலந்துக்கொள்ளும் இவ்விழாவில் அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...