ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர்கள் பலர் விரும்பினாலும், ரஜினிகாந்த் யாருடன் பணியாற்ற விரும்புகிறாரோ அவர்களுக்குத் தான் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நிலையில், தனது ஒவ்வொரு படத்தின் ரிலிசிற்கு முன்பாகவோ, அல்லது ரிலிஸ் ஆன பிறகோ, “ரஜினிகாந்துக்கான கதை என்னிடம் இருக்கிறது, அவர் ஒகே சொன்னால் அவரை இயக்க நான் ரெடி” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறி வருவது வழக்கமாகிவிட்டது.
முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்’ தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் தனது ரஜினிகாந்த் ஆசை குறித்து முருகதாஸ் பேட்டியளித்துள்ளார். அதில், நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், அவருக்கு கதை எழுதிவதில் பெரிய சிரமம் இருக்காது. ஒரு மாதத்தில் அவருக்கான நல்ல கதையை நான் எழுதிவிடுவேன். தற்போது என்னிடம் ரஜினிக்கான கதை இருக்கிறது. அவர் சம்மதித்தால் போதும்., என்று தெரிவித்துள்ளார்.
இப்படி ரஜினிகாந்த் படத்தை இயக்குவதற்காக, தன்னை தீவிர ரசிகன் என்று கூறி தொடர்ந்து பிட்டு போட்டு வரும் முருகதாஸுக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா, என்பது வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தான் தெரிய வரும்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...