சினிமாவைப் போலவே தொலைக்காட்சி தொடர்களும் அதிகமான பொருட்ச் செலவோடு பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுவதோடு, காதல், ஆக்ஷன் என்று சினிமா பாணியில் எடுப்பதோடு, சில சர்ச்சையான விஷயங்களையும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான ‘செம்பருத்தி’ சீரியலுக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சீரியலின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இந்து கடவுளான ராமர் மற்றும் சீதை ஒன்றாக இருக்கும் சிலையை கீழே போட்டு உடைப்பது போல காட்டப்படுகிறது. இந்த காட்சி இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறி, வழக்கறிஞர் ஈஷ்வரமூர்த்தி என்பவர், திருப்பூர் போலீசில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...