விவாகரத்துக்கு பிறகு நடிப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் அமலா பால், தற்போது பாலிவுட்டில் கால் பதிப்பதற்கான முயற்சியில் இருக்கிறார். இதற்கிடையே ‘ஆடை’-க்காக அவர் பல படங்களின் வாய்ப்புகளை நிராகரித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
ஆம், ‘ஆடை’ என்ற தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக பிற பட வாய்ப்புகளை அமலா பால் நிராகரித்திருக்கிறார். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக கோடம்பாக்கத்தில் உருவெடுத்திருக்கும் ரத்னகுமார் இயக்கும் இப்படம் உணர்ச்சிகரமான கதைக்களத்தை கொண்ட படமாக உருவாகிறது. எனவே தான் இப்படத்தின் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் அமலா பால் ரொம்பவே கனவமாக இருந்திருக்கிறார்.
பொதுவாக இது போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியண்ட், பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் அல்லது சூப்பர் நேச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால், இந்த படம் மேற்கூறிய எந்த வகையிலும் சாராத, முன் கணிப்புகளை உடைத்தெரியும் உணர்ச்சிக்கரமான பரபரப்பான கதையின் திரைவடிவம் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்திற்கான பிற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த முழு விபரத்தையும் படக்குழு வெளியிட உள்ளது.
இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது...
‘மெளனகுரு’ திரைப்படம் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சாந்தகுமார், தந்து இரண்டாவது படமான ‘மகாமுனி’ படத்திற்காக அதிகமான வருடங்களை இடைவெளியாக எடுத்துக் கொண்டாலும், கதையாசிரியராகவும், திரைப்படக்கள ஆசிரியராகவும் தனக்கென்று தனி ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றிருக்கிறார்...
‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...