தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால், மலையாலம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க தொடங்கிய அமலா பால், படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கி கையை உடைத்துக் கொண்டார்.
இதனால், படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அமலா பால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக களத்தில் இறங்கியுள்ளார்.
தனது உடைந்ததை கூட பொருட்படுத்தாத அமலா பால், தன் சொந்த ஊர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களை வாங்கி கேரளாவுக்கு அனுப்பியுள்ளார். குறிப்பாக பெண்களுக்கு தேவைப்படும் பொருட்களை அதிகமாக வாங்கி அவர் அனுப்பியிருக்கிறார்.
அமலா பால் நினைத்திருந்தால் பணத்தை கொடுத்து யாரையாவது வாங்கி அனுப்ப சொல்லியிருக்கலாம், ஆனால் அவரே நேரடியாக கடைகளுக்கு சென்று இந்த சமயத்தில் பெண்களுக்கு எந்த பொருட்கள் முக்கியமாக தேவைப்படுமோ அப்பொருட்களை வாங்கியிருக்கிறார்.
தனது உடைந்த கையோடு அமலா பால் கடைகளில் பொருட்கள் வாங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
நடிகர்கள் பலர் தங்கள் ரசிகர்கள் மூலம் கேரள மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், நடிகை ஒருவர் நேரடியாக மக்களுக்கு உதவி செய்வது, அதுவும் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் அதை பொருட்படுத்தாமல் உதவி செய்வதை மக்கள் வரவேற்றுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...