முன்னணி ஹீரோக்களின் படங்களே சில தட்டு தடுமாறி கரையேறும் தற்போதைய தமிழ் சினிமாவில் நயந்தாராவின் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதோடு வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதைப் பார்த்து ஒட்டு மொத்த கோலிவுட்டே சற்று அதிர்ச்சியடைந்திருக்கிறது.
கடந்த 17 ஆம் வெளியான நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் மெஹா ஹிட் படம் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளது. படம் வெளியீடே பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், படமும் தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
நயந்தாராவின் நடிப்பு, யோகி பாபுவின் காமெடி, கதாப்பாத்திர தேர்வு, கதைக்களம் என்று ஒட்டு மொத்தப் படமும் வயது வித்தியாசமின்றி அனைவரும் ரசிக்கும்படியாக இருப்பதால் பல இடங்களில் ஹவுஸ் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ’கோலமாவு கோகிலா’ படத்தை மக்கள் கொண்டாடுவது போல திரையுலகினரும் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார்.
படத்தை பார்த்து மிகவும் ரசித்தவர் ‘கோலமாவு கோகிலா’ படக்குழுவினர் ஒவ்வொருவரையும் தொலைபேசி மூலம் அழைத்து பேசி பாராட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராவை பாராட்டியதை அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...