தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக கன மழை பெய்து வரும் கேரளாவில் வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தற்போது மழை நின்றிருந்தாலும், தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு பல நடிகர் நடிகைகள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
கேரளாவில் தமிழ் நடிகர்களின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் விஜய்க்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதோடு, அவரது அனைத்து படங்களும் அங்கே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்துவிடும்.
தமிழகத்தைப் போல கேரளாவின் பல பகுதிகளில் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்தது தான். அதனால் தான் கேரள வெள்ளத்திற்கு நடிகர் விஜய் என்ன உதவி செய்யப்போகிறார், என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், எந்த நடிகரும் கொடுக்காத அளவுக்கு நடிகர் விஜய், கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார். விஜயின் இந்த உதவிக்கு கேரள மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...
கதாநாயகிகளை மையப்படுத்திய கதைக்களங்களில் தொடர்ந்து வெற்றிக் கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்ததோடு, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்...