சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் மக்களிடம் பிரபலமாக இருப்பதோடு, அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வரிசையில், தமிழ் சீரியல் உலகில் சின்னத்திரை நயந்தாராவாக வலம் வருபவர் வாணி போஜன்.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘தெய்வமகள்’ சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வாணி போஜன், செல்லும் இடம் எல்லாம் அவரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துக் கொள்கிறது. மேலும், திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு ஏராளமாக அவரை அனைத்தையும் நிராகரித்தவர், பொருமையாக இருந்து தனது ‘தெய்வமகள்’ சீரியலை முடித்துக் கொடுத்த கையோடு, திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தற்போது தனது முழு கவனத்தையும் சினிமா மீது செலுத்தி வரும் வாணி போஜன், அவ்வபோது பல போட்டோ ஷூட்களை நடத்தி அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், பிரபலமானலே எதிர்கொள்ளும் பிராபலங்களை தற்போது வாணி போஜனும் எதிர்க்கொண்டு வருகிறார். அதாவது, வாணி போஜன் பெயரில் பல ட்விட்டர் பக்கங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் போலியான பக்கங்கங்கள் என்றாலும், அவற்றின் மூலம் வெளியிடப்படும் தகவலால் வாணி போஜனுக்கு சிக்கல்கள் ஏற்படுகிறதாம். இதனால் ரொம்பவே அப்செட்டாகியிருக்கும் அவர், தற்போது போலியான பக்கங்கங்களில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், தனது ஒரிஜினல் ட்விட்டர் பக்கத்தையும் அவர் தெரியப்படுத்தியுள்ளார். இது தான் அது,
.@vanibhojanoffl is my only official account, kindly avoid any tweets or updates in my name from any other accounts. Thank you 😇 pic.twitter.com/2yv7hfm8S2
&mdash ; Vani Bhojan (@vanibhojanoffl) September 19, 2018
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...