தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார், ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என்று பல கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதோடு, டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது மனைவி நடிகை மஞ்சுளா சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு ப்ரித்தா, ஸ்ரீதேவி, வனிதா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.
இந்த மூன்று மகள்களும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், தற்போது திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகிவிட்டார்கள். இவர்களில் வனிதா என்பவர் மட்டும் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், வனிதா மீது நடிகர் விஜய குமார் சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில், மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை வனிதாவுக்கு வாடகைக்கு விட்டதாகவும், ஆனால் தற்போது அவரது வீடு என்று கூறி வீட்டை காலி செய்யாமல் இருப்பதாக, தெரிவித்திருக்கிறார்.
வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு விவகாரம் போலீஸ் வரை சென்று பிறகு சமாதானம் அடைந்த நிலையில், தற்போது இவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...