Latest News :

ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கிய தயாரிப்பாளர் தாணு! - எதற்கு தெரியுமா?
Thursday September-20 2018

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றிருக்கும் கலைப்புலி எஸ்.தாணு, தான் தயாரிக்கும் படங்களை பிரம்மாண்டமாக தயாரிப்பதோடு, தனது ஒவ்வொரு படத்தின் விளம்பரத்தையும் பிரம்மாண்டமாக செய்து வருகிறார். 

 

முன்னணி ஹீரோக்கள், வளரும் ஹீரோக்கள், எதார்த்தமான கதைக்களம் கொண்ட படங்கள், என்று அனைத்து விதமான திரைப்படங்களையும் தயாரித்து வரும் தாணு, திரையுலகினருக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடம் கட்டுவதற்காக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 

Kalaippuli Thanu

 

இதற்கான வரைஓலையை (டிடி) தென்னிந்திய வர்த்தக சபையின் கன்வீனர் எஸ்.கல்யாண், தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் தயாரிப்பாளர் எஸ்.தாணு இன்று வழங்கினார்.

Related News

3483

’காந்தாரா’, ’ஹனுமன்’ படங்கள் வரிசையில் ‘ரூபன்’ இடம் பிடிக்கும் - இயக்குநர் ஐயப்பன் நம்பிக்கை
Thursday April-18 2024

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...

அம்பானி வீட்டு திருமணத்திற்கு நிகராக நடந்த இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!
Thursday April-18 2024

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...

ஓடிடி தளத்திலும் சக்கைப்போடு போடும் ‘பிரேமலு’
Thursday April-18 2024

இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...