தமிழ் சினிமாவில் திடீர் திடீரென்று பல ஸ்டார்கள் வந்தாலும், அவர்களில் சிலர் மட்டுமே மக்களின் கவனத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த வகையில், குறுகிய காலத்தில் “யார் அந்த பப்ளிக் ஸ்டார்? என்று தமிழ் சினிமாவிலும், மக்களிடத்திலும் பெரும் கேள்வியை எழுப்பியவர் துரை சுதாகர்.
‘தப்பாட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். அப்படங்கள் ரிலிஸுக்கு தயாராக உள்ள நிலையில், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், என்று அடம் பிடிக்காமல், நல்ல வேடமாக இருந்தால், சின்ன வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடி, என்று அறிவித்தார். அதன்படி, தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறார்.
ஆம், பொதுவாக நாட்டில் நடக்கும் முக்கியமான விஷயங்களை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் கலாய்ப்பார்கள். அதற்கு அவர்கள், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் திரைப்பட புகைப்படங்கள் அல்லது வடிவேலுவின் நகைச்சுவை காட்சியின் புகைப்படங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சமீபத்திய முக்கிய விவகாரம் ஒன்றுக்கு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் ‘தப்பாட்டம்’ படத்தின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த மீம்ஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது, ”வங்கி கணக்கு தொடங்க ஆதார் தேவையில்லை, பான் கார்டு போதும், ஆனால் பன் கார்டு வாங்க ஆதார் கட்டாயம்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் ‘தப்பாட்டம்’ படத்தின் புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி மீம்ஸ் வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்த மீம்ஸ் வெளியாக இரண்டு வாரங்கள் ஆனாலும், தற்போது வரை பல சமூக வலைதளங்களில் இந்த மீம்ஸ் வைரலாகி வருகிறது.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் மீம்ஸ்களைக் காட்டிலும், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் மீம்ஸ் தான் தற்போது டிரெண்டிங்காக உள்ளதாம்.
இதே அந்த மீம்ஸ்,
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...