சில தெலுங்குத் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குநர்கள் பலர் தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கூறியதோடு, சில பெயர்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஸ்ரீரெட்டியின் புகாரை தொடர்ந்து மேலும் சில தெலுங்கு குணச்சித்திர நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்தார்கள்.
மேலும், தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டியை தான் சந்தித்தது கிடையாது. அவர் பட வாய்புக்காக தானே இப்படி பேசி வருகிறார். உண்மையாகவே அவருக்கு திறமை இருந்தால், நான் அவருக்கு வாய்ப்பு தர தயார், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தந்திருப்பதோடு, அதற்கான அட்வான்ஸையும் கொடுத்துவிட்டதாக, ஸ்ரீரெட்டி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் செட்டிலாகியிருக்கும் ஸ்ரீரெட்டி, தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், ராகவா லாரன்ஸ் படத்திலும் வாய்ப்பை பெற்றுவிட்டார்.
மொத்தத்தில், ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் தனது புகார் மூலம் சாதிக்காததை தமிழ் சினிமாவில் சாதித்துவிட்டார்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...