கடந்த ஆண்டு தீபாவளியாகட்டும், இந்த ஆண்டு தீபாவளியாகட்டும் அது விஜய் தீபாவளியாகவே முடிந்தது. ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ‘சர்கார்’ படம் மூலம் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய், தற்போது தனது 63 வது படத்திற்கு தயாராகிவிட்டார்.
இதற்கிடையே, தமிழகம் மட்டும் இன்றி பல வெளிநாடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்ட ‘சர்கார்’ இன்னும் சில நாட்களில் 50 வது நாளை தொட இருக்கிறது. இதனை பெரும் விழாவாக கொண்டாட, பல பகுதிகளில் இருக்கும் விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கீரின் திரையரங்கம் மிகப்பெரிய அளவில் கொண்டாட முடிவ் செய்திருக்கிறதாம்.
விஜய், அஜித் என்று இரு உச்ச நடிகர்களின் படங்களை பாராபட்சமின்றி கொண்டாடி வரும் ரோகினி திரையரங்கம், ‘சர்கார்’ படம் மெஹா ஹிட் படம் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், விரைவில் படத்தின் 50 வது நாளை கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...