Latest News :

பேச்சுவார்த்தையில் தீர்வு : பெப்ஸி வேலை நிறுத்தம் வாபஸ் ஆக வாய்ப்பு!
Tuesday September-05 2017

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்ஸி) இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பெப்ஸி வேலை நிறுத்தத்தை தொடங்கியது. பிறகு பேச்சுவார்த்தை நடந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.

 

இந்த நிலையில், திரைப்படம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் திரைப்பட தொழிலில் பங்கேற்கலாம், என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெப்ஸி அமைப்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியதோடு, இன்று (செப்.05) சென்னை கண்டன ஆர்பாட்டத்தையும் நடத்த திட்டமிட்டிருந்தது.

 

இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி அமைப்பினரிடையே நேற்று இரவு பேச்சு வார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதன் மூலமாக, பெப்ஸி அமைப்பு இன்று நடத்த இருந்த கண்டன ஆர்பாட்டத்தை கைவிட்டதோடு, வரும் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related News

445

’மெளனகுரு’ புகழ் இயக்குநர் சாந்தகுமாரின் ‘ரசவாதி’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday May-07 2024

‘மெளனகுரு’ திரைப்படம் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சாந்தகுமார், தந்து இரண்டாவது படமான ‘மகாமுனி’ படத்திற்காக அதிகமான வருடங்களை இடைவெளியாக எடுத்துக் கொண்டாலும், கதையாசிரியராகவும், திரைப்படக்கள ஆசிரியராகவும் தனக்கென்று தனி ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றிருக்கிறார்...

அதர்வாவின் பிறந்தநாளை கொண்டாடும் ‘டி.என்.ஏ’ படக்குழு!
Tuesday May-07 2024

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம்! - ‘ஒரு நொடி’ படக்குழுவினரின் புதிய படம் தொடங்கியது
Tuesday May-07 2024

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...