Oct 23, 2017 04:16 AM

நடிப்புக்கு முழுக்கு - ரிச்சாவின் சினிமா குறித்த தாறுமாறு கருத்து!

நடிப்புக்கு முழுக்கு - ரிச்சாவின் சினிமா குறித்த தாறுமாறு கருத்து!

திருமணம் ஆன பிறகும் தற்போது நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகைகள் மத்தியில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இருந்தே போதே நடிப்புக்கு முழுக்கு போட்டவர் ரிச்சா கங்கோபத்யா.

 

தனுஷுடன் ’மயக்கம் என்ன’, சிம்புவுடன் ‘ஒஸ்தி’ ஆகிய படங்களில் நடித்தவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். பிறகு அவருக்கு வாய்ப்புகள் பல வந்தாலும், அனைத்தையும் நிராகரித்தவர், திடீர் என்று மாயமானார். விசாரித்ததில் அவர் அமெரிக்காவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

 

கடந்த 5 வருடங்களாக நடிப்புக்கு முழுக்க போட்டுள்ள ரிச்சாவை நடிக்குமாறு பலர் வற்புறுத்தி வரும் நிலையில், இனி வாழ்நாளில் சினிமா பக்கமே வர மாட்டேன், என்று ரிச்சா ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

 

தற்போது அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து வரும் ரிச்சா கங்கோபாத்யா, தனக்கு வேறு ஒழு வாழ்க்கை கிடைத்துவிட்டது. அதுவே போதும், சினிமாவே வேனாம்டா சாமி...என்று கூறியுள்ளார்.