Oct 26, 2017 08:38 AM

பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’!

பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’!

இயக்குநரும், வசனகர்த்தாவும், கவிஞருமான பிருந்தா சாரதி, ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற ஹைகு கவிதை நூலை எழுதியுள்ளார்.

 

இந்த நூல் வெளியீட்டு விழா ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பு தளத்தில் நேற்று (அக்.25) நடைபெற்றது. நடிகர் விஷால் நூலை வெளியிட இயக்குநர் லிங்குசாமி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கவிஞர்கள் பிறைசூடன், அறிவுமதி, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

தமிழ் ஹைகு நூற்றாண்டு வெளியீடாக டிஸ்கவரி புக் பேலர் இந்த நூலை வெளியிட்டுள்ளது.