Oct 31, 2017 05:04 AM

கருத்தரிப்பு சிகிச்சை மையம் திறந்த நடிகை கெளதமி!

கருத்தரிப்பு சிகிச்சை மையம் திறந்த நடிகை கெளதமி!

நவீன சாதனங்கள் கொண்ட கருத்தரிப்பு சிகிச்சை மையம் ஒன்றை நடிகை கெளதமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

 

சட்குரு ஹெல்த்கேர் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஒயாசிஸ் செண்டர் ஃபார் ரீபுரொடக்டிவ் மெடிசின், கருத்தரிப்புக்கான சிகிச்சைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடை முறைகள் மற்றும் நெறிமுறைகளை அறிமுகம் செய்ததன் மூலம் தென்னிந்தியாவில் மருத்துவ சிகிச்சை நடைமுறையை நிர்ணயம் செய்திருக்கிறது.

 

தென்னிந்தியாவில் முன்னணி கருத்தரிப்பு மையமாக விளங்கும் ஒயாசிஸ் கருத்தரிப்பு மையம் சென்னை அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில் நடிகை கெளதமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கருத்தரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.