Oct 31, 2017 05:37 AM

‘மெர்சல்’ கட்-அவுட்டால் ஒருவர் படுகாயம் - போலீஸ் நடவடிக்கை

‘மெர்சல்’ கட்-அவுட்டால் ஒருவர் படுகாயம் - போலீஸ் நடவடிக்கை

தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போதும் ஹவுஸ் புல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்காக வைக்கப்பட்ட கட்-அவுட் ஒன்றால் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்போரூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு 40 அடிக்கு மேல் ஒரு கட்-அவுட் வைத்துள்ளனர்.

 

தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அந்த கட்-அவுட் கீழே விழ, அந்த வழியாக சென்ற ஒருவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.

 

இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, போலீஸ் தரப்பிலோ, கட்-அவுட் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை, என்று கூறியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளனர்.