Oct 31, 2017 02:13 PM

பிரபல நடிகை கற்பழித்து கொலை - நியாயம் கேட்டு போராடும் அம்மா!

பிரபல நடிகை கற்பழித்து கொலை - நியாயம் கேட்டு போராடும் அம்மா!

கடந்த 2002 ஆம் ஆண்டு உயிரிழந்த பிரபல நடிகை பிரதியுஷா, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், என்று அவரது தாயார் கூறி கதறி அழுதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முரளியின் ‘மனுநீதி’, விஜயகாந்தின் ‘தவசி’, ‘சவுண்ட் பார்ட்டி’ என சில தமிப் படங்களில் நடித்துள்ள பிரதியுஷா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

 

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தன் கதாலருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். என்ற செய்தி வெளியானது. ஆனால், உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்துவிட்டார். இது குறித்து போலீசார் பதிவு செய்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

 

இந்த நிலையில், பிரதியுஷாவின் அம்மா நேற்று முன் தினம் ஐதராபாத்தில் இந்த சம்பவம் குறித்து அளித்த பேட்டியில், “என் மகள் தற்கொலை செய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவி நாடகத்தை நடத்தியுள்ளனர். அதற்கான காயங்கள், நகக் கீரல்கள் அவளின் உடல் முழுவதும் காணப்பட்டது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள். ஆண்டவன் அவர்களை தண்டிப்பான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை.” என்று கண்ணீர் விட்டு அழுதார்.