Nov 07, 2017 06:19 AM

மெர்சல் படத்தை தொடர்ந்து சுசீந்திரன் படதிற்கு கிளம்ப போகும் எதிர்ப்பு

மெர்சல் படத்தை தொடர்ந்து சுசீந்திரன் படதிற்கு கிளம்ப போகும் எதிர்ப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தில் சில சர்ச்சையான விசயங்கள் பற்றி பேசப்பட்டிருக்கிறதாம்.

 

ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்திற்கு தேசிய கட்சி ஒன்றால் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், அதே விசயங்கள் குறித்து ‘நெஞ்சில் துணிவிருந்த்தால்’ படத்திலும் பேசப்பட்டிருப்பதாக இயக்குநர் சுசீந்த்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதன் காரணமாக சுசீந்த்திரன் படத்திற்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க கோடும் ர்ன்று எதிப்பார்க்கப்படுகிறது.

 

இது குறித்து இயக்குநர் சுசீந்த்திரனிடம் கேட்டதற்கு, “எனது அனைத்து படத்திலும் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை சொல்வேன். அப்படித்தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் சமூக அக்கறைக் கொண்ட செய்தியை சொல்லியிருக்கிறேன். அதற்கு எத்தகைய எதிர்ப்பு வந்த்தாலும், அதை எதிர்த்து நிற்கவும் நான் தயாராக இருக்கிறேன்.” என்றார்.