Nov 12, 2017 02:45 PM

பின்னணியில் ஒலிக்கும் கோஷம்! - நயந்தாராவின் அதிரடி முடிவு

பின்னணியில் ஒலிக்கும் கோஷம்! - நயந்தாராவின் அதிரடி முடிவு

சமீபத்தில் வெளியாகியுள்ள ‘அறம்’ படத்தில் நயந்தாரா நடிப்பதோடு மட்டும் இல்லாமல், பணத்தையும் முதலீடு செய்திருக்கிறார். இதனால் வேறு எந்த படத்திற்கும் செய்யாத பல விஷயங்களை இந்த படத்திற்காக செய்து வருகிறார்.

 

மிமர்சன ரீதியாக படம் ஓகே என்ற பெயர் எடுத்தாலும், வசூல் ரீதியாக டல்லடிப்பதாகவே தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால், படத்தை ரசிகர்கள் கவனத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நயன், சென்னயில் உள்ள சில திரையரங்கங்களில் நேரடி விசிட் அடித்தார். நயனை பார்த்த ரசிகர்கள், “தலைவி...தலைவி...” என்று கோஷமிட அம்மணி உற்சாகமாகிவிட்டார்களாம்.

 

அதே உற்சாகத்தோடு தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களுக்கு விசிட் அடிக்க முடிவு செய்துள்ள நரந்தாரா, அப்படியே சில ஏரியாக்களில் நுழைந்து மக்களை குறிப்பாக பெண்களை சந்திக்க முடிவு செய்துள்ளாராம்.