Nov 14, 2017 06:51 AM

ராதிகாவின் திடீர் முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ராதிகாவின் திடீர் முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்த ராதிகா, தனது ‘சித்தி’ சீரியல் மூலம் சின்னத்திரையிலும் முன்னனி இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல்வேறு டிவி தொடர்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா தயாரிப்பு மற்றும் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகு வரும் ‘வாணி ராணி’ சீரியலிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ள நிலையில், ராதிகாவின் திடீர் முடிவு அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

அதாவது, இன்னும் இரண்டு மாதத்திற்க்குள் ‘வாணி ராணி’ சீரியலை முடிக்க ராதிகா முடிவு செய்துவிட்டாராம். இதனை அவரே, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

ராதிகாவின் இந்த முடிவு ‘வாணி ராணி’ ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.