Nov 17, 2017 08:44 AM

இந்த நடிகையின் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசாம்!

இந்த நடிகையின் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசாம்!

பிரபல நடிகயின் தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு தொகை வழங்கப்படும், என்று சத்திரிய சமாஜ் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்த நடிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் வரலாற்று படமான ‘பத்மாவதி’ படத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் நிலையில், படத்தின் இயக்குநர் மற்றும் நாயகி தீபிகா படுகோனின் தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாஅக உள்ள இப்படத்திற்காக, தீபிகாவை பலர் மிரட்டியதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.