Nov 19, 2017 07:55 AM

நயந்தாரா ஆம்பூர் பிரியாணி என்றால், விக்னேஷ் யார்? - சிம்பு ரசிகரின் குசும்பு!

நயந்தாரா ஆம்பூர் பிரியாணி என்றால், விக்னேஷ் யார்? - சிம்பு ரசிகரின் குசும்பு!

நயந்தாரா நேற்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பலர் வாழ்த்து கூறினார்கள். அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதுவும் சாதாரனமாக அல்ல, ”தங்கமே...”என்று கொஞ்சி தீர்த்துவிட்டார்.

 

விக்கியின் ட்வீட்டை பார்த்த சிம்பு ரசிகர் ஒருவர், ஐயா ,கஜினி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தும் தனக்கான அட்ரஸ் இன்றி தவித்தரை "வல்லவனால் வல்லமை பெறச்செய்தார்" எங்கள் தலைவன். என் தலைவன் சிம்பு இல்லையென்றால் டயானா குரியன் எல்லாம் காணாமல் போய் இருப்பார். என்று கமெண்ட் போட்டுள்ளார்.

 

அத்தோடு விட்டார்களா, ”ஆம்பூர் பிரியாணி உளுந்தூர் பேட்டைல இருக்க நாயிக்குதான் கெடைக்குனு இருந்தா அதா யாரால மாத்த முடியும். நல்லா இருயா” என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

 

நயன்தாராவும், சிம்புவும் ஒரு காலத்தில் காதலித்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். நயன்தாரா, சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின என்பது குறிப்பிடத்தக்து.