Dec 04, 2017 09:46 AM

மெர்சல் 50 வது நாள் விழாவில் நடந்த சோகம்!

மெர்சல் 50 வது நாள் விழாவில் நடந்த சோகம்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு ரூ.250 கோக்கு மேலாக வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மெர்சல் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் நேற்று சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் கொண்டாடப்பட்டது.

 

திரையரங்கம் ஹவுஸ்புல் ஆனது மட்டுமின்றி ரசிகர்கள் பேனர், போஸ்ட்டர், பால் அபிஷேகம் என மீண்டும் முதல் காட்சி போலவே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

அதை தொடர்ந்து திரையரங்கில் ஒரு சில ரசிகர்கள் சீட்டை அடித்து உடைத்துள்ளனர், இவை திரையரங்க உரிமையாளருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து வெளியிட்டுள்ளார், இந்நிகழ்வு ஒரு சில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர்.