Dec 04, 2017 10:16 AM

நமீதாவால் மன உளைச்சலுக்கு ஆளான மா.கா.பா.ஆனந்த்!

நமீதாவால் மன உளைச்சலுக்கு ஆளான மா.கா.பா.ஆனந்த்!

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ள நமீதாவுக்கு சமீபத்தில் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை நமீதா திருமணம் செய்துக் கொண்டார்.

 

இந்த நிலையில், ஹீரோவாக வளர்ந்து வரும் மா.கா.பா.ஆனந்த் நமீதாவால் மன உளைச்சளுக்கு ஆளான தகவல் வெளியாகியுள்ளது.

 

மா.கா.பா.ஆனந்தின் சமீபத்திய பேட்டி ஒன்றில், “நடிகைகள் யராவது உங்களை அண்ணன் என்று கூறியிருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த்வர், “நடிகை நமீதாவை  நான் பேட்டி எடுக்கும் போது அவர் என்னை அண்ணா, என்று கூறிவிட்டார். அதை கேட்டு நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதுவிட்டேன்.” என்றார்.

 

அனைவரையும் மச்சான்...என்று செல்லமாக அழைக்கும் நமீதா அண்ணன் என்று கூப்பிட்டால், யாறுக்கு தான் அழுகை வராது.