Dec 05, 2017 02:20 PM

நடிகர் விஷால் திடீர் கைது!

நடிகர் விஷால் திடீர் கைது!

வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் விஷால், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 

இந்த நிலையில், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால், ஆர்.கே.நகர் பகுதியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்ப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.

 

ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.