Dec 05, 2017 03:15 PM

மத்திய தணிக்கை குழுவினருக்கு திரையிடப்படும் ‘நீலம்’!

மத்திய தணிக்கை குழுவினருக்கு திரையிடப்படும் ‘நீலம்’!

இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் உண்மையை சொல்லும் திரைப்படமாக ‘நீலம்’ உருவாகியுள்ளது.

 

இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்ததை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வெங்கடேஷ் குமார், டெல்லியில் உள்ள மத்திய அரசு ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்தார்.

 

இந்த நிலையில், ‘நீலம்’ படத்தை வரும் டிசம்பர் 9 ஆம் தேதி மத்திய ஆணைய அதிகாரிகள் பார்க்க உள்ளனர்.

 

மனித நேயத்தின் அறைகூவலாக உருவாகியுள்ள நீலம் படத்திற்கு மத்திய தணிக்கை குழுவின் முடிவு சாதகமாகவே அமையும் என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.