Dec 06, 2017 06:11 AM

தமிழர்களை கொன்றவர்களுடன் கைகோர்த்த இளையராஜா குடும்பத்தார்!

தமிழர்களை கொன்றவர்களுடன் கைகோர்த்த இளையராஜா குடும்பத்தார்!

இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த ராஜபக்சேவை, ஒட்டு மொத்த தமிழர்களும் எமனாக பார்க்கும் நிலையில், சிலர் ராஜபக்சே குடும்ப நபர்களுடன் உறவாடி வருகிறார்கள். அந்த வகயில் இளையராஜாவின் குடிம்பத்தைச் சேர்ந்த பலர் ராஜபக்சே குடும்பத்தோடு உறவாட தொடங்கியுள்ளார்கள்.

 

இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரனின்மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே அளித்த விருந்தில் பங்கேற்றுளார்கள்.

 

‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, அப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு நாமல் ராஜபக்சேவை சந்தித்த அவர், நாமல் அளித்த விருந்திலும் கலந்துக் கொண்டுள்ளார்.

 

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, தமிழர்கள் பரம எதிரியாக பார்த்துக் கொண்டிருக்க வெங்கட் பிரபு போன்றவர்கள் பண ஆசையால், தமிழர் என்பதையும் மறந்து இனப்படுகொலைவாதி ராஜபக்சே குடும்பத்தார் அளித்த விருந்தில் பங்கேற்றதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.