Dec 07, 2017 03:29 AM

நான் எதையும் தலை கீழாகத் தான் செய்வேன் - சிம்பு

நான் எதையும் தலை கீழாகத் தான் செய்வேன் - சிம்பு

சினிமாவிலும் சரி, நிஜ வாழ்விலும் சர்ச்சையோடே வாழ்ந்து வருபவர் சிம்பு. இவரைப்பற்றி பக்கம் பக்கமாக AAA தயாரிப்பாளர் புகார் அளித்தார்.

 

இதற்கு சிம்பு இன்று சக்கப்போடு போடு ராஜா இசைவெளியீட்டில் பதிலளிப்பார் என்று கூறப்பட்டது.

 

அதன்படி சிம்பு பேசுகையில், AAA படம் சரியாக போகவில்லை, பட்ஜெட் அதிகமானதால் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டோம். என்மீது தொடர்ந்து புகார் வருகிறதென்றால் என்மீது தவறு இல்லாமல் இருக்கமுடியாது. நான் நல்லவன்னு சொல்லல..

 

என் மீது தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

 

ஏன் என்னை அனைவரும் வெறுக்கிறார்கள், சினிமாவிலிருந்து துரத்த பார்க்கிறார்கள் என்றால் மற்றவர்கள் பார்க்கும் பார்வையில் நான் பார்ப்பதில்லை.

 

எல்லோரும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பார்த்தால் எனக்கு தெய்வம், குரு, பிதா, மாதா என்ற பார்வையில் தான் தலைகீழாகத்தான் செய்வேன் என்றார்.