Dec 11, 2017 03:32 AM

’காதல்’ பட நடிகருக்கு வந்த பரிதாப நிலை!

’காதல்’ பட நடிகருக்கு வந்த பரிதாப நிலை!

மாபெரும் வெற்றிப் பெற்ற தமிழ்ப் படங்களின் பட்டியலில் இடம் பிடித்த படங்களில் ஒன்றான ‘காதல்’ யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்க்த்தில் வெளியான இப்படம் விமர்ச ரீதியாக பெரும் பாராட்டை பெற்றதோடு பல விருதுகளையு வென்றது.

 

இப்படத்தில் கருட்டாண்டி என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் தான் அருண். இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆனார்.

 

இதில் விஜய் நடித்த சிவகாசியும் ஒன்று, ஆனால், அதை தொடர்ந்து இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஒரு படத்திலும் இவரை காணவில்லை.

 

வாய்ப்பிற்காக சென்னையில் முகாமிட்டு, கோடம்பாக்கத்தில் அலைந்து திரிந்த அருண், வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் நொந்து போய்விட்டாராம்.

 

தற்போது தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுவிட்ட அருண், அங்கு சிறுதொழில் ஒன்றை செய்து வருகின்றாராம்.