Dec 14, 2017 03:34 PM

‘ஆர்.கே.நகரை கைப்பற்றிய ‘மெர்சல்’ தயாரிப்பாளர்!

‘ஆர்.கே.நகரை கைப்பற்றிய ‘மெர்சல்’ தயாரிப்பாளர்!

வைபவ், சனா அல்தாப் ஆகியோரது நடிப்பில் சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.கே.நகர்’. இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள இப்பத்தில் சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை, சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

 

பிரேம்ஜி அமரன் இசையில், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், பிரவீன் கே.எல். படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.