Aug 10, 2017 07:17 AM

பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் - விஜய் கோரிக்கை

பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் - விஜய் கோரிக்கை

விஜய் நடிப்பில் உருவாகும் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள “ஆளப்போறான் தமிழன்...” என்ற பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில், நேற்று இரவு விஜய் திடீரென்று பெண்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

அதில், சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான், யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.

 

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.