Jan 23, 2018 05:36 AM

மீண்டும் வந்தது சுச்சி லீக்ஸ் - கலக்கத்தில் முன்னணி நடிகைகள்!

மீண்டும் வந்தது சுச்சி லீக்ஸ் - கலக்கத்தில் முன்னணி நடிகைகள்!

கடந்த ஆண்டு, இதே நாளில், பின்னணி பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நடிகர், நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியானதோடு, சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ஆபாச பதிவுகளும், யார் யாருடன் நெருக்கமாக இருக்கிறார்கள், போன்ற பதிவுகளும் வெளியானது.

 

இதனால், கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட, நடிகர் நடிகைகள் டிவிட்டர் நிறுவனத்திற்கு புகார் அளித்ததை தொடர்ந்து சுச்சியின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. இருந்தாலும், அதே பெயரில் மேலும் சில டிவிட்டர் பக்கங்கள் புதிதாக தோன்றி, அதன் மூலம் நடிகர், நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன.

 

இதற்கிடையே, தனது டிவிட்டர் கணக்கை யாரோ சிலர் ஹக் செய்துவிட்டார்கள், என்று சுசித்ரா போலீசில் புகார் தெரிவிக்க, அவரது கணவரான நடிகர் கார்த்திக் குமார், சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை, அதனால் தான் அவர் இப்படி நடந்துக்கொள்கிறார். அவரை லண்டனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உள்ளோம், என்று கூறியதோடு, வெளிநாட்டுக்கும் அழைத்துச் சென்றுவிட்டார்.

 

 

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து, அதனை நினைவு கூறும் விதத்தில் சுச்சி லீக்ஸ் பக்கத்தில் அஷ் டாக் ஒன்றை பதிவிட்டிருப்பதோடு, சில நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களது ஆபாச வீடியோ இன்று வெளியிடப்பட்டும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.