Apr 19, 2018 10:59 AM

ஆற்றில் குளிக்கச் சென்ற நடிகை நீரில் மூழ்கி மரணம்!

ஆற்றில் குளிக்கச் சென்ற நடிகை நீரில் மூழ்கி மரணம்!

இலங்கையச் சேர்ந்த பிரபல நடிகை ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையை பூர்விமாக கொண்டவர் நடிகை துஷானி சில்வா. இவர் இலங்கையில் நாடகம் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், கினிகத்தேனை யடிபேரியா பகுதியில் உள்ள களனி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்ற நடிகை துஷானி சில்வா, நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

நடிகையின் இத்தகைய விபத்து இலங்கை திரையுலகினரையும் மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.