Jun 22, 2018 04:11 AM
புழல் சிறையில் நடிகை குட்டி பத்மினி!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல பழம்பெரும் நடிகர்களுடன் நடித்த அனுபவம் உள்ள நடிகைகளில் முக்கியமானவர் குட்டி பத்மினி. நடிப்பது மட்டும் இன்றி, தயாரிப்பு, இயக்கம் என்று பல திறமைகளைக் கொண்ட இவர், சின்னத்திரையிலும் தனது வெற்றிக் கொடியை நாட்டியவர்.
தற்போதும் சீரியல்களில் பிஸியாக இயங்கி வரும் குட்டி பத்மினி, கில்டு சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில், சிறை கைதிகளின் நல்வாழ்விற்காக குட்டி பத்மினி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சென்னை புழல் சிறையில் இருக்கும் கைதிகள் மன அமைதி பெற தியான பயிற்சி, பகவத் கீதை உபதேசம் என நல்ல விசயங்களை செய்து வருகிறாராம்.