கடன் தொல்லை! - விடைபெறும் விஜய் ஆண்டனி!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, ஹீரோ அவதாரம் எடுத்ததுடன், கூடவே தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். முதல் படம், இரண்டாம் படம் என்று தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த விஜய் ஆண்டனி கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார்.
விஜய் ஆண்டனி ஒரே மாதிரியாக நடிக்கிறார், என்ற விமர்சனம் எழுந்ததால் காமெடி கலந்த படங்களில் நடிக்க முயற்சித்த விஜய் ஆண்டனிக்கு தோல்வியே கிடைத்தது. இருந்தாலும் ‘பிச்சைக்காரன் ‘ படத்தின் மூலம் மீண்டும் வெற்றியைக் கொடுத்த விஜய் ஆண்டனி, அப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்ததால், கடன் தொல்லைக்கு ஆளானார்.
’திமிரு புடிச்சவன்’ படத்தின் பிரஸ் மீட்டில், விஜய் ஆண்டனியே தனக்கு நிறைய கடன் இருக்கிறது, அதற்காக தான் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்கிறேன், என்று கூறிய நிலையில், இன்று வெளியாகியிருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவதால், அவர் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
மேலும், இனி சொந்தமாக படங்கள் தயாரிக்கப் போவதில்லை என்ற முடிவு எடுத்திருக்கும் விஜய் ஆண்டனி, பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதோடு, இரண்டு வருடங்களுக்கு இசையமைக்கப் போவதில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம்.
மொத்தத்தில், இனி நடிப்பு ஒன்றை மட்டுமே குறி வைக்க இருக்கும் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் என்ற அவதாரத்தில் இருந்து விடைபெறப் போகிறார்.