Sep 05, 2017 01:50 PM

நோ சொன்ன அர்ஜுன், ஒகே சொன்ன பசுபதி!

நோ சொன்ன அர்ஜுன், ஒகே சொன்ன பசுபதி!

சசிகுமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்தை முத்தையா இயக்குகிறார். ஏற்கனவே சசிகுமாரை வைத்து ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக சசிகுமாருடன் இணைந்துள்ளார்.

 

இதில், மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க, வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பதாக இருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அர்ஜுன் அந்த வேடத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டாராம். அர்ஜுன் கதாபாத்திரத்தில் பசுபதியை நடிக்க வைக்க முயற்சித்த படக்குழுவினருக்கு பசுபதி, கதையை கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட்டார்.

 

பசுபதியின் வேடம் வெறும் வில்லனாக மட்டும் இன்றி, ஹீரோவுக்கு இணையான வேடமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.