Sep 06, 2017 07:08 AM

2 மணி நேர பரோலில் வெளியே வந்த நடிகர் திலீப்!

2 மணி நேர பரோலில் வெளியே வந்த நடிகர் திலீப்!

பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

 

கடந்த இரண்டு மாதங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நடிகர் திலீப், தாக்கல் செய்த அனைத்து ஜாமீன் மனுக்களையும் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

 

இந்த நிலையில், தந்தையின் நினைவுதின சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் திலீப்புக்கு நீதிமன்றம் 2 மணிநேரம் பரோல் வழங்கியதை தொடர்ந்து அவர் இன்றி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

 

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவார்கள், என்று கூறிய கேரள காவல்துறை, இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்குவதை நீதிமன்றம் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.