Sep 07, 2017 05:55 AM

யானைகளுக்காக தாய்லாந்தில் முகாமிட்டுள்ள பிரபு சாலமன்!

யானைகளுக்காக தாய்லாந்தில் முகாமிட்டுள்ள பிரபு சாலமன்!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான ‘கும்கி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கும்கி 2’ என்ற தலைப்பில் பிரபு சாலமன் இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் லிங்குசாமியின் மருமகன் மதி என்பவர் ஹீரோவாக நடிக்க, நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ஹீரோயினாக நடிக்கிறார்.

 

கும்கியை காட்டிலும் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டு வருவதால், இப்படத்தில் யானைகள் இடம்பெறும் காட்சிகள் பிரமிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், கும்கியில் ஒரு சில யானைகள் மட்டுமே படத்தில் காட்டப்பட்ட நிலையில், இப்படத்தில் யானை கூட்டங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தவும் பிரபு சாலமன் திட்டமிட்டுள்ளார்.

 

இதற்காக, யானைகள் அதிகமாக உள்ள தாய்லாந்து நாட்டு வனப்பகுதியில் ‘கும்கி 2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தொடங்கியுள்ள பிரபு சாலமன், யானைகளுக்காக பல மாதங்களாகவே தாய்லாந்திலேயே முகாமிடவும் திட்டமிட்டுள்ளாராம்.