Sep 11, 2017 07:17 PM

பிக் பாஸில் சினேகன் வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

பிக் பாஸில் சினேகன் வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ், தற்போது தமிழ்ல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

 

100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் யார்? இருக்கிறார்களோ அவர்கள் தான் இந்த போட்டியின் வெற்றியாளர்கள். அப்படி 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுபவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக கிடைக்கும்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்று கோடி ரூபாய் பரிசை வென்றால், அந்த பணத்தின் மூலம் தான் என்ன செய்வேன், என்பதை சினேகன் தெரிவித்துள்ளார்.

 

இது பற்றி நேற்றைய நிகழ்வில் வையாபுரியுடம் சினேகன் கூறும்போது, ஒரு வேளை 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியில் நான் வெற்றி பெற்றுவிட்டால், 100 கிராமங்ககளுக்கு சேர்த்து மிகப்பெரிய நூலம் ஒன்றை கட்டி அதற்கு பிக் பாஸ் நூலம் என்று பெயர் வைத்து, தலைவரை (கமல்) வைத்து திறப்பேன். அந்த பணத்தில் இருந்து ஒரு பைசா கூட சொந்த செலவுக்கு எடுத்துக்கொள்ள மாட்டேன், என்று தெரிவித்தார்.